“தமிழ் புதல்வன் திட்டம்” ரூ.1000 தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியீடு! ஆதார் எண் கட்டாயம்..
Tamil Puthalvan Scheme 1000 Rupees Aadhaar Compulsory
Tamil Puthalvan Scheme 1000 Rupees Aadhaar Compulsory 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயர்கல்விக்கு செல்லுகின்ற மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் குறித்து முக்கிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்தகவலை குறித்து முழுவிவரத்தோடு கீழே காணலாம்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
ஆகஸ்ட் மாதம் முதல் தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ள தமிழ் புதல்வன் திட்டத்திற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ் புதல்வன் திட்டத்தை குறித்து தமிழக அரசு கூறி இருப்பது என்னவென்றால்,
தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இந்த தகவல் அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும்.
அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் எண்ணை எடுக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
அந்த பகுதியில் ஆதார் மையம் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தமிழ் புதல்வன் திட்டம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு தமிழ் புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்வி உதவித்தொகை ஆனது மாதம் ரூபாய் 1000 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது இதற்காக மாணவர்களிடம் இருந்தும் கல்வி நிறுவனங்களிடம் இருந்தும் பின்வரும் தகவல்கள் அரசிடம் இருந்து கேட்கப்பட்டுள்ளது.
1. மாணவர் பெயர்
2. பிறந்த தேதி
3. ஆதார் எண்
4. EMIS ஐ டி
5. இமெயில் ஐடி
6. மொபைல் எண்
7. தாயார் பெயர்
8. தந்தை பெயர்
9. பாதுகாவலர் பெயர்
10. பள்ளி படிப்பு முடித்த விவரம்
11. கல்வி நிறுவனத்தின் பெயர்
12. பாடப்பிரிவு
13. படிக்கும் ஆண்டு
14. வங்கியின் பெயர் மற்றும் வங்கிக் கிளையின் பெயர்
15. வங்கி கணக்கு எண்
16. IFSC எண்
17. எம் ஐ சி ஆர் எண்
உள்ளிட்ட இந்த 17 முக்கிய ஆவணங்கள் தமிழ் புதல்வன் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உதவி தொகைக்கு விண்ணப்பிக்க கூடிய மாணவர்கள் பயிலக்கூடிய கல்வி நிறுவனங்களில் இருந்து அரசனது இந்த பின்வரும் தகவல்களை தற்போது கேட்டு வருகின்றனர்.
மிக முக்கிய குறிப்பு மாணவர்களின் வங்கி கணக்கு என்ன ஆனது ஆதார் எண்ணுடன் சீடிங் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான அறிவிப்பாகும்.
இதனை மாணவர்கள் ஆதார் இணையதளம் மூலம் உங்களுடைய வங்கிக் கணக்கு சீடிங் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும்