ரூ.10 லட்சம் மேல் கடனுதவி!- பெண்களுக்கு வெளியிட்ட மத்திய அரசின் சூப்பர் திட்டம்!.. Standup India Scheme Full Details Tamil 2024

ரூ.10 லட்சம் மேல் கடனுதவி!- பெண்களுக்கு வெளியிட்ட மத்திய அரசின் சூப்பர் திட்டம்!..

Standup India Scheme Full Details Tamil 2024

Standup India Scheme Full Details Tamil 2024 ரூ.10 லட்சம் கடன் உதவி அளிக்கும் மத்திய அரசின் சூப்பர் திட்டம்

மத்திய அரசானது சுய தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிப்பதற்கான பல்வேறு விதமான சிறப்பு சலுகைகளை மத்திய அரசானது அறிவித்து வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Standup India Scheme Full Details Tamil 2024
Standup India Scheme Full Details Tamil 2024

அந்த வகையில் இந்தியாவில் பெரும்பாலும் வேலை தேடுபவர்களாகவே உள்ளார்கள். அவர்களை சுயதொழில் செய்ய ஊக்குவிக்கும் வகையாக மத்திய அரசு பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

வேலைகளை நம்பியில்லாமல் சொந்த தொழிலுக்காக பல திட்டங்கள் தற்போது கிடைக்கப்பெற்று வருகின்றன. இப்போது இதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தை பார்ப்போம்.

ஏழை எளியோரின் வளர்ச்சிக்காக இளைஞர்கள் பெண்கள் சிறு வணிகர்கள் ஆர்வலர்கள் ஆகியோருக்கு பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தற்போது வழங்கி வருகின்றார். 

அவற்றில் மிக முக்கியமான ஸ்டார்ட் ஆப் இந்தியா திட்டம் இத்திட்டத்தின் மூலம் பட்டியல் ஜாதி மற்றும் பழங்குடியின பெண்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கப்படுகின்றது. இந்த ஸ்டார்ட் ஆப் இந்தியா திட்டமானது ஆகஸ்ட் 15 /2015 அன்று பாஜகவின் மோடி அரசாங்கத்தால் மத்திய அரசு மூலம் தொடங்கப்பட்டது.

அன்று முதல் இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 10 லட்சம் முதல் ஒரு கோடி வரை அரசு கடன் உதவி வழங்கி வருகிறது. சிறு தொழில்கள் அமைத்து தொழில் முனைவோராக விரும்புவோர்க்கு இந்த கடன்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இத்திட்ட மூலம் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு ஊக்கப்படுத்தும் மிக முக்கிய திட்டமாக இந்த திட்டம் உள்ளது.

இத்திட்டத்திற்கு ஏற்கனவே இரண்டு லட்சத்தி 64 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இதில் 2 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு ரூபாய் 54 ஆயிரத்து 698 கோடி கடன் ஆனது வழங்கப்பட்டுள்ளது.

தொழில் தொடங்க விரும்பும் பெண்கள் தங்கள் சொந்த தொழிலில் 10 முதல் 15 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்திற்கு தேவையான  பணத்தை மத்திய அரசு மூலம் கடனாக வழங்குகிறது.  இதன் பிறகு ஒரே நேரத்தில் 18 மாதங்கள் தடைக்காலம் வழங்கப்படுகிறது. அதாவது இந்த 18 மாதங்களுக்கு கடனை திருப்பி செலுத்த வேண்டிய அவசியமில்லை.

இந்த கடனை பெரும் பெண்களின் வயது 18 வயதுக்கு மேலாக இருக்க வேண்டும் சிபில் மதிப்பெண்ணை சரிபார்க்கும் எந்த வங்கியும் கடந்த காலத்தில் கடன் வாங்கி கடனை திருப்பி செலுத்தாமல் போனால் அவர்கள் கடன் கொடுக்க மாட்டார்கள். எனவே தொழில் செய்து வரும் பெண்களுக்கு இந்த கடனை பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு https://www.standupmitra.in/ என்ற இணையதள முகவரியை பார்க்கவும். இத்திட்டம் இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறையால் செயல்படுத்தப்படுகின்றது வட்டி விகிதமானது சுமார் 11 முதல் 13 சதவீதம் படியாக இருக்கலாம்.

அவர்களின் கடன் தொகையை பொறுத்து இந்த வட்டி தொகையானது அமையப்பெறும். மேலும் இத்திட்டம் பற்றிய முழுமையான தகவல் தங்களுக்கு தேவைப்படுகின்றது. எனில் மேலே குறிப்பிட்ட மத்திய அரசின் இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்

Leave a Comment