நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய செய்தி
School Holiday July 18th For Rain
School Holiday July 18th For Rain கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூராகிய மாவட்டங்களுக்கு வானிலை மையம் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. எனவே இது குறித்து வானிலை மையம் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் 19 ஜூலை வங்க கடலில் உருவாக வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
எனவே இதனால் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
அதேபோன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையமானது தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக வால்பாறையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.