ரூ.12000 வரப்போகுது.. மத்திய அரசு அறிவித்த சூப்பர் அறிவிப்பு! விவசாயிகளே ரெடியா இருங்க இரட்டிப்பாகும் பணம்…
PM Kisan Yojana Amount May Be Increased Doubled July 23 Budget
PM Kisan Yojana Amount May Be Increased Doubled July 23 Budget மத்திய அரசானது ஜூலை 23ஆம் தேதி பட்ஜெட் ஆனது தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டில் மத்திய அரசின் மிக முக்கிய திட்டமாக கருதப்படக்கூடிய பிரதம மந்திரியின் கிசான் திட்டம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பணத்தை மத்திய அரசு இரண்டு மடங்கு ஆக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே பாரதி ஜனதா தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு தற்போது வழங்கக்கூடிய ஆண்டுக்கு Rs.6000 (6 ஆயிரம்) ரூபாய் பணத்தை Rs.12000 (பன்னிரண்டாயிரம்) ஆக வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இந்த திட்டமானது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை கவரும் வகையில் உள்ளதால் இந்த முடிவை உடனடியாக எடுக்க மத்திய அரசு ஆயத்தமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் மத்திய அரசானது விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிசான் திட்டத்துடன் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகள் எந்த பட்ஜெட்டில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு திட்டங்கள் தான் ஏழை மக்களுக்கு சென்றடைய கூடிய மிக முக்கிய திட்டமாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது எனவே மத்திய அரசு ஆனது தற்போது பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 வீதம் 3 தவணைகளில் பணமானது மத்திய அரசு வழங்கி வருகிறது.
தற்போது இந்த பணத்தை இரண்டு மடங்காக்கி ஆண்டுக்கு 12 ஆயிரம் வீதம் வழங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது மேலும் மகிழ்ச்சியான தகவல் என்னவென்றால் அதை 12 மாதத்துக்கு Rs.1000 (ரூபாய் ஆயிரம் ) வீதம் ரூபாய் ஆண்டுக்கு Rs.12000 ( 12 ஆயிரம் ) வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் இனி அவர்களின் வங்கி கணக்கில் மாதம் ரூபாய் 1000 வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே ஆந்திர அரசனது விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 20,000 வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது தற்போது மத்திய அரசு அது ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியான தகவல்.
வருகிற சட்டசபை தேர்தல்களான அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் உடனடியாக இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகின்றது .
மேலும் அடுத்த ஆண்டு ஜார்கண்ட் மற்றும் டெல்லி சட்ட சபை தேர்தல் நடக்க உள்ளது தற்போது விவசாயிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கினால் அது விவசாயிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வர அது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று மத்திய அரசு நம்புவதால், மத்திய அரசின் இந்த புதிய அரசின் முதல் பட்ஜெட்டிலேயே விவசாயிகளுக்கு இந்த இரட்டிப்பு மகிழ்ச்சியானது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது