வெறும் 500 ரூபாய்க்கு சிலிண்டர் முதல்வர் அறிவிப்பு!.. வெளியான மகிழ்ச்சி செய்தி!..
LPG Cylinder Rate 500 Rupees CM Announced
LPG Cylinder Rate 500 Rupees CM Announced வெறும் 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும் என்று இந்த மாநில முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார் .அச்செய்தியை குறித்து இப்பதிவில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

முன்னொரு காலத்தில் சமையலுக்கு அடுப்புகளை பயன்படுத்திக் கொண்டிருந்தனர். தற்போது காலம் செல்ல செல்ல நிலைமை மாறிக்கொண்டே வருகிறது. இப்போது அனைவருடைய வீட்டிலும் சமையல் சிலிண்டர் ஆனது கட்டாயம் பயன்படுத்தப்படுகிறது. சமையல் சிலிண்டரில் சுகாதாரமான எரிவாய்வானது கிடைக்கிறது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இந்தியாவில் சிலிண்டர் பயன்படுத்தாமல் அடுப்பில் சமைத்து உண்பவர்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவுதான் நகரங்களில் மட்டுமல்லாமல் நாட்டின் மூளை முடுக்கெல்லாம் சமய சிலிண்டர்கள் பயன்படுத்துவதை நாம் காண்கிறோம். மண்ணெண்ணெய் ஊற்றி அடுப்பில் சமையல் செய்யும் காலம் மாறி மக்கள் விறகு வெட்டி அதனைக் கொண்டு வந்து அடுப்பில் சமைக்கும் சிரமம் தற்போது இல்லை. இதனால் பெண்களின் சுகாதாரமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இப்போது அனைவரது வீட்டிலும் சிலிண்டர் உள்ளதால் சிலிண்டரின் தேவையானது அதிகரித்து அதன் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது .ஆனால் சிலிண்டர் விலை குறைவதை விட விலை அதிகரிப்பதே அதிகமாக உள்ளது.
இந்தியாவில் மக்களிடையே சிலிண்டர் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு சிலிண்டர் இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த உஜ்வாலா கட்டத்தின் கீழ் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 300 ரூபாய் வரை மானியம் வழங்கப்படுவதால் சிலிண்டர் பொதுமக்களுக்கு 600 முதல் 700 ரூபாய்க்கு கிடைக்கிறது இந்த திட்டத்தின் வாயிலாக வழங்கப்படுகின்ற மானிய பணம் மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. இந்த நிலையில் ஹரியானா மாநிலம் முதல்வர் நயிப் சைனி தனது மாநில மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அவர் வெளியிட்டு இருக்கின்ற இந்த புதிய அறிவிப்பானது ஒரு வீட்டிற்கு ரூபாய் 500 என்ற அளவில் சிலிண்டர் கிடைக்கிறது. ஆண்டு வருமானம் ரூபாய் 1.80 லட்சத்திற்கும் குறைவானவர்கள் இந்த உதவியை பெற்றுக் கொள்ளலாம். ஹரியானா முதல்வர் அறிவிப்பால் மாநிலத்தில் உள்ள 4.6 மில்லியன் குடும்பங்கள் பயனடைவார்கள்.