தமிழக மாணவ மாணவிகளுக்கு கல்விக்கான 12 லட்சம் உதவித்தொகை எவ்வாறு விண்ணப்பிப்பது..
Kalki Krishnamoorthy Education Scholarship 2024 Apply
Kalki Krishnamoorthy Education Scholarship 2024 Apply தமிழகத்தில் பயிலக்கூடிய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தமிழக அரசு சார்பாக பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களின் மூலம் மாணவனுக்கு கல்வி உதவித் தொகையானது வழங்கப்படுகிறது. எந்த ஆண்டு முதல் தமிழ் புதல்வன் உள்ளிட்ட புதிய திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையானது வழங்கப்படுகின்றது.

தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை ரூபாய் 12 லட்சம் உடனே விண்ணப்பிக்கவும்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
அதேபோல மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்வி உதவி தொகை திட்டம் ஆனது வழங்கப்படுகிறது. மேலும் பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவி தொகை மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி உதவித் தொகை என தமிழக அரசு மற்றும் மத்திய அரசு சார்பாக பல்வேறு கல்வி உதவித் தொகை ஆனது மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் மத்திய அரசின் மூலம் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் உயர்கல்வி படிக்கும் மாணவிக்கான மத்திய அரசின் ரூபாய் 50,000 வருடத்திற்கு வழங்கக்கூடிய கல்வி உதவி தொகை திட்டம் என மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை மாநில மற்றும் மத்திய அரசு ஆனது வழங்கி வருகிறது.
இது மட்டுமல்லாமல் மாநில அரசு சார்பாக உழவர் பாதுகாப்பு திட்டம் கட்டுமான தொழிலாளராக பாதுகாப்பு திட்டம் என பல்வேறு திட்டங்களின் மூலமும் கல்வி உதவித் தொகையானது மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது இந்த திட்டங்கள் ஆனது மதியம் மற்றும் மாநில அரசின் பங்களிப்பு மூலம் வழங்கப்படுகிறது.
அதேபோல பல்வேறு தனியார் அறக்கட்டளைகளின் மூலமாகவும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆனது வழங்கப்பட்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் தமிழகத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கான ஏழை மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கும் வகையில் 2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான உதவித்தொகைகளை கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை வழங்க உள்ளது.
படிப்பில் சிறந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கல்வி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வருகிற ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அப்படி விண்ணப்பிக்க மாணவனுக்கு மொத்தத்தில் ரூபாய் 12 லட்சம் பெறுமானம் உள்ள கல்வி உதவித்தொகைகள் கிடைக்கும். அதுவும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் தகுதிகளுக்கு ஏற்ப பகிர்ந்து அளிக்கப்படும் என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை தெரிவித்துள்ளது .அது மட்டுமின்றி இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க சிலர் நிபந்தனைகளும் வைக்கப்பட்டுள்ளது.
அவற்றில் சில பின்வருமாறு,
நடப்பு கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்றுள்ள கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும் அதற்கான சான்றிதழ் போனபைட் சர்டிபிகேட் வைத்திருக்க வேண்டும்.
பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரி ஆகிய வகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் தற்போது படிப்பவராக இருக்க வேண்டும்,
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கடைசியாக தேர்வு எழுதியதில் 90 சதவீதம் சராசரி மதிப்பெண் குறைந்தபட்சமாக பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உடைய குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம்– Click Here