பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு!.. சூப்பர் லேட்டஸ்ட் அப்டேட்!..
August 3 Local Holiday For Namakkal
August 3 Local Holiday For Namakkal ஆகஸ்ட் 3-ம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்திற்கு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பதை குறித்து கீழ்க்கண்ட பதிவில் காணலாம்.

வருகின்ற ஆகஸ்டு மூன்றாம் தேதி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெறவிருக்கின்ற வல்வில் ஓரி விழாவினை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும். அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடையேழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தனையும் கொடைத்தன்மை இணையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் அரசு சார்பில் பல்வில் ஓரிவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 2 மற்றும் மூன்றாம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் தமிழக அரசின் சார்பாக மற்றும் மலர் கண்காட்சி நடைபெற இருக்கிறது. இவ்விழாவிற்காக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் ஆகியோர் குடும்பத்துடன் கொல்லிமலை பகுதிக்கு வருகை புரிந்து விழாவில் கலந்து கொள்ளும் வகையில் ஆகஸ்ட் 3-ம் தேதி சனிக்கிழமை அன்று நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுகின்ற அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மூன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை நாளில் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். மேலும் வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.