மகிழ்ச்சி நாளை தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விழிப்புணர் கூட்டம் Happy News August 2 Awareness meeting in Govt Schools

மகிழ்ச்சி நாளை தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விழிப்புணர் கூட்டம்

August 2 Awareness meeting in Govt Schools

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விழிப்புணர் கூட்டம் தமிழ்நாட்டில் அனைவருக்குமான கல்வியை வழங்குவதில் 37,592 அரசுப் பள்ளிகளின் பங்கு மிக முக்கியமானது. August 2 Awareness meeting in govt Schools

அதில் 37,312 அரசுப் பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்களில் பெற்றோர்கள் பொறுப்பேற்று சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் படி, தங்கள் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளை குழந்தைகளின் பெற்றோர்களே மேலாண்மை செய்யும் உரிமையை பள்ளி மேலாண்மைக் குழு (smc) அவர்களுக்கு அளிக்கிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
August 2 Awareness meeting in govt Schools
August 2 Awareness meeting in govt Schools

பெற்றோர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் மாணவர்கள், இல்லம் தேடிக் கல்வி கல்வியாளர்கள் இவர்களை உள்ளடக்கியதே பள்ளி மேலாண்மைக் குழு. கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதிலும் ஒரே நாளில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடந்த பள்ளி மேலாண்மைக் குழு (smc) மறுகட்டமைப்புக்கான விழிப்புணர்வு கூட்டங்களில் 23.2 இலட்சம் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

பள்ளி மேலாண்மைக் குழுவில் இயற்றப்பபட்டுள்ள தீர்மானங்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வண்ணம் மாநில அரசின் தலைமைச் செயலர் தலைமையில் 14 பிற துறைகளை சார்ந்த செயலர்களை உள்ளடக்கிய மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவும் (SLMC), ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் தலைமையில் துறைசார்ந்த மாவட்ட தலைமை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், SMC தலைவர்கள் மற்றும் குடிமைச் சமூக அமைப்பின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய 24 பேர் கொண்ட மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவும் (DLMC) அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் அதன் விழுதுகளாகிய முன்னாள் மாணவர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் விதமாக, பள்ளி மேலாண்மைக் குழுக்களில் அவர்களும் இணையவுள்ளனர். முன்னாள் மாணவர்கள் இக்குழுவில் இணைவதன் மூலம் பள்ளி மற்றும் சமூகத்திற்கும் இடையே நல்லதொரு இணைப்பை ஏற்படுத்தி, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, அரசுப் பள்ளியின் மேம்பாட்டிற்கும் மாணவர்களின் வளர்ச்சிக்கும் தோளோடு தோள் நிற்பர்.

கடந்த இரு ஆண்டுகளாக பள்ளிகளின் மேம்பாடு மற்றும் மாணவர்களின் வளர்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றன. இவ்வாண்டு நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வில் நாம் அனைவரும் பங்கேற்று பள்ளிகளில் சமூகத்தின் பங்களிப்பை உறுதி செய்வோம்.

நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆலோசனை கூட்டம் நடைபெறும் ஆகஸ்ட் – 2 ஆம் தேதி நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக்கான விழிப்புணர்வுக் கூட்டத்தில்/அறிமுகக் கூட்டத்தில் பெற்றோர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மற்றும் கல்வி சார்ந்து செயல்படும் அனைவரும் பங்கேற்று

பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்துவோம்!!!

பள்ளிகளை வளப்படுத்துவோம்!!!

என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அன்போடு கேட்டுக்கொள்கிறது.

நம் பள்ளி!! நம் பெருமை!!

Home Page

Leave a Comment