அரசுப் பள்ளிகளில் பள்ளி நேரம் மாற்றம்!- ஜூலை 15 முதல் அமல்.. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
Pudhucherry School Time Change From July 15
Pudhucherry School Time Change From July 15 புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் தற்போது சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கு ஏற்ற வகையில் பள்ளியில் நேரமானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அரசு ஆரம்ப நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் நேரமானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து காலை 8.45 மணிக்கு பதிலாக, காலை 9 மணிக்கு பள்ளிகள் துவங்கும். மாலை 4 மணிக்கு பதிலாகமாலை 4:20 மணிக்கு பள்ளி வகுப்புகள் நிறைவு பெறும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இதன் அடிப்படையில் காலை 9 மணிக்கு பள்ளிகள் துவங்கி 15 நிமிடம் அசெம்பிளி நடைபெறும். முதல் பாடம் காலை 9.15க்கு துவங்கி பத்து மணிக்கு நிறைவு பெறும். இரண்டாவது பாடம் பத்து மணிக்கு துவங்கி 10.45 மணிக்கு முடிவடையும். இடைவேளை10.45 மணி முதல் 10.55 வரை விடப்படுகிறது. அடுத்து மூன்றாவது பாடம்10.55 மணி முதல் 11.40 வரையும், 11:40 முதல் 12.25 வரை நான்காவது பாடம் நடைபெறும்.
இதனை தொடர்ந்து உணவு இடைவேளை 12.25 முதல் 1.30 வரை விடப்படுகிறது. உணவு இடைவெளி தொடர்ந்து மதியம் 1:30 முதல் 2.10 வரை ஐந்தாவது பாடம், 2.10 முதல் 2.50 வரை ஆறாவது பாடம் நடத்தப்படும். இரண்டாவது இடைவேளை மதியம் 2:50-லிருந்து 3 மணி வரை விடப்படுகிறது. இதனை தொடர்ந்து மதியம் மூன்று மணி முதல் 3.40 வரை ஏழாவது பாடம், 3.40 முதல் 4.20 வரை எட்டாவது பாடம் என விடப்படுகிறது.
இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12. 25 மணிக்கு இடைவேளை விடப்படுகிறது.
அதன் பிறகு 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன.
இந்த புதிய நடைமுறை வருகிற 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நேர மாற்றம் வரும் ஜூலை 15 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. புதுச்சேரியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.