தமிழகத்தில் தொடர் விடுமுறை காரணமாக வெளியான முக்கிய அறிவிப்பு!..
TNSTC Special Bus Running 3 Continue Holidays
TNSTC Special Bus Running 3 Continue Holidays பொது மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது தொடர் விடுமுறை காரணமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது அதனைக் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.பொது மக்களின் வசதிக்காக பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறைகள் வரும் நாள்களில் மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

ஆனால் சமீப காலமாக சனி, ஞாயிறு என ஒவ்வொரு வார இறுதி நாள்களிலும் மக்கள் சென்னை, கோவை என முக்கிய நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புகின்றனர். எனவே வார இறுதி நாள்களிலும் சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படுகின்றன. இதனால் பொது மக்களும் சிரமம் இன்றி சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புகின்றனர். போக்குவரத்துக் கழகத்துக்கும் இதன் மூலம் வருவாய் அதிகரிக்கிறது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக வசதிகள், சேவைகள் இருப்பதால் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. தொடர்ந்து இந்த பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்த வார இறுதி நாள்களோடு திங்கள் கிழமை கிருஷ்ண ஜெயந்தியும் (ஆகஸ்ட் 26) வருவதால் மூன்று நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. அதோடு வெள்ளிக் கிழமை சுப முகூர்த்த தினம் என்பதால் தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் 485 பேருந்துகளும், 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 60 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் 70 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.