மகளிர் உரிமை தொகை ரூ.1000.. சற்று முன் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. Magalir Urimai Thogai Special Camp Rumor

மகளிர் உரிமை தொகை ரூ.1000.. சற்று முன் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

Magalir Urimai Thogai Special Camp Rumor

Magalir Urimai Thogai Special Camp Rumor மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவலானது பரவி வருகிறது .எனவே பொதுமக்கள் இதனை நம்ப வேண்டாம் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தி தொகுப்பை கீழ்க்கண்டவற்றில் நாம் காணலாம்.

Magalir Urimai Thogai Special Camp Rumor
Magalir Urimai Thogai Special Camp Rumor

மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக பரவி வரும் தகவல் வெறும் வதந்தியே என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. வாட்ஸ் அப்பில் பரவி வரும் புகைப்படத்தை யாரும் நம்ப வேண்டாம். மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சிறப்பு முகாம் ஏதும் நடைபெறவில்லை.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

பெண்களின் சுயமரியாதை காக்கவும், அவர்களது உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாகவும் மாதம் தோறும் 1000 ரூபாயை வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் புதிய திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற இத்திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது

முதற்கட்ட முகாம்கள் ஜுலை 24 தேதி முதல் ஆகஸ்ட் 04 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05 தேதி முதல் 14 தேதி வரை நடைபெற்றது. இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்கள் மற்றும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

Leave a Comment