Tamil Puthalvan Scheme Rs 1000 Check
தமிழ் புதல்வன் ரூ.1000 வங்கி கணக்கிற்கு வந்தாச்சு உடனே செக் பண்ணுங்க..
Tamil Puthalvan Scheme Rs 1000 Check தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி படிக்க இந்த ஆண்டு முதல் மாதம் ரூபாய் 1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும், அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு இந்த உதவித் தொகையானது வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த திட்டமானது நாளை ஆகஸ்ட் 9ம் தேதி தமிழக முதல்வர் அவர்கள் துவக்கி வைக்க உள்ள நிலையில் தற்போது ஒரு நாள் முன்னதாகவே மாணவர்களின் வங்கி கணக்கில் ரூபாய் 1000 வரவு வைக்கப்பட்டுள்ளது எனவே மாணவர்கள் தாங்கள் எந்த வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளீர்களோ அந்த வங்கி கணக்குக்கு சென்று உங்களுக்கான உதவித்தொகை வந்துள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
ரூபாய் 1000 உதவித்தொகையானது முதற்கட்டமாக தமிழக அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு இந்த உதவித் தொகையானது வழங்கப்படுகிறது முதற்கட்டமாக தற்போது உயர்கல்வி படித்து வருகின்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகையானது அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக இந்த ஆண்டு உயர்கல்வி படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகையானது தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருகின்ற மாணவர்களுக்கும் தற்போது அவர்களின் வங்கி கணக்கில் ரூபாய் 1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் எந்த ஆண்டு உயர் கல்வி சேர்ந்த மாணவிகளுக்கும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ரூபாய் 1000 பெறக்கூடிய மாணவர்களுக்கு இன்று மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் ஏடிஎம் அட்டையானது வழங்கப்பட்டுள்ளது அதற்கான நிகழ்ச்சியானது அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்களின் மூலம் இன்று நடைபெற்று முடிந்தது.
நாளை அந்தந்த மாவட்டம் முழுவதும் உள்ள மாணவர்களில் குறிப்பிட்ட சிலரை தேர்ந்தெடுத்து அந்த மாணவர்களுக்கு நாளை மாவட்ட ஆட்சியரின் மூலம் இந்த தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் வங்கியில் இருந்து பெறக்கூடிய ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.
தமிழ் புதல்வன் திட்டமானது நாளை தமிழக முதல்வரின் தலைமையில் தமிழகம் முழுதும் இந்த திட்டமானது துவக்கப்பட உள்ளது மேலும் தமிழகத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் இந்த திட்டமானது துவக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் புதல்வன் திட்டமானது விரைந்து முடிக்க வேண்டும் குறிப்பிட்ட காலத்தில் ஆகஸ்ட் ஒன்பதில் திட்டமானது துவங்கப்பட வேண்டும் என்பது அறிவிக்கப்பட்டதன் காரணமாக இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அரசு அதிகாரிகள் முதல் கொண்டு கல்வி நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பேராசிரியர்கள் வரை இந்த திட்டத்துக்காக கடின உழைப்பை அளித்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக துவக்க உறுதுணையாக இருந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பெறக்கூடிய மாதம் ரூபாய் ஆயிரத்தை மாணவர்கள் தங்கள் படிப்புக்கு பயனுள்ள வகையில் செலவழித்து பயன்படுத்த வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம் எனவே மாணவர்கள் இந்த உதவி தொகையினை தங்களின் மேற்படிப்புக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.