10th படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் சூப்பரான வேலை!- உடனே விண்ணப்பிங்க மிஸ் பண்ணிடாதீங்க!..
TNHRCE Recruitment 2024 Ezhuthar
TNHRCE Recruitment 2024 Ezhuthar இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படுகின்ற அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் காலியாக இருக்கின்ற எழுத்தர் பணியிடங்களின் வேலைவாய்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்பணியிடத்திற்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை ,எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பள விவரம்
தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை
பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி
10ம்வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்கின்ற முறை
நேர்முக தேர்வு மூலம்
எவ்வாறு விண்ணப்பிப்பது?
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவஞ்சல் மூலம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07.09.2024 மாலை 05.45 மணி வரை ஆகும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான சான்றிதழ்களுடன் அஞ்சல் உரையில் உதவி எழுத்தர் பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
முகவரி: உதவி ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருவரங்க வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் 620005
மேலும் ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையிடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.
இந்து சமயத்தை சார்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றோப்பம் பெற்று அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்றுச் சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படா விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |