இலவச சைக்கிள் 2024 வழங்கும் தேதி தமிழக அரசு அறிவிப்பு.. மாணவர்களுக்கு வெளியான குட் நியூஸ்!..TN Free Cycle Distributed On 22 July 2024

இலவச சைக்கிள் 2024 வழங்கும் தேதி தமிழக அரசு அறிவிப்பு மாணவர்களுக்கு வெளியான குட் நியூஸ்!..

TN Free Cycle Distributed On 22 July 2024

TN Free Cycle Distributed On 22 July 2024 அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டமானது தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது.

TN Free Cycle Distributed On 22 July 2024
TN Free Cycle Distributed On 22 July 2024

தற்போது தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு 2024 – 25 ஆம் கல்வியாண்டில் 11th பதினோராம் வகுப்பு பயிலக் கூடிய மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி (சைக்கிள்) வழங்கும் திட்டத்தை இன்று சென்னையில் சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் ராஜ கண்ணப்பன், மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

இலவச சைக்கிள் 2024 வழங்கும் தேதி

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வரும் திங்கட்கிழமை 22 ஜூலை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு இலவச பொருட்களை வழங்கி வருகிறது அதாவது மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், இலவச சீருடை, இலவச புத்தகப்பை, இலவச நோட்டு புத்தகம், இலவச சைக்கிள், இலவச லேப்டாப், இலவச பேருந்து பயணச்சீட்டு என மாணவர்கள் பயன்பெற

இந்த மாணவர்களின் ஏழை எளிய பெற்றோர்கள் எந்த வித சிரமத்திற்கும் உள்ளாகாமல் தங்களின் மகன் மற்றும் மகள்களை படிக்க வைப்பதற்கான அனைத்து விதமான பொருட்களையும் தமிழகத்தில் வழங்கி இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு ஆனது விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசை பொருத்தவரை எந்தவித அரசு பொறுப்பேற்றாலும் பள்ளி மாணவர்களுக்கான அனைத்து சலுகைகளையும் தொடர்ந்து வழங்குவது தமிழகத்தின் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகின்றது.

அதேபோல பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் கல்லூரி படிப்பை படித்தாலும் அவர்களுக்கும் பல்வேறு சலுகைகளை தமிழக அரசானது வழங்கி வருகிறது அந்த வகையில் மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டமும்,

மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு தமிழ் புதல்வன் திட்டம் மூலமும் சமூக நலத்துறையின் மூலம் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரமானது வழங்கப்பட்டு வருகின்றது இதுபோன்ற திட்டங்கள் இந்தியாவின் முன்னோடி திட்டமாக கருதப்படுகின்றது

 

Leave a Comment