ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!.. இனி எல்லாம் வீட்டிற்கு வரப்போகுது!..
Ration Products Door Delivery Scheme Soon Introduced
Ration Products Door Delivery Scheme Soon Introduced இனி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாம் டோர் டெலிவரி விரைவில் அமைச்சர் தந்த முக்கிய அறிவிப்பு.

இனி தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் விரைவில் டோர் டெலிவரி செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இந்த டோர் டெலிவரி ஆனது கூட்டுறவு சங்கங்களின் மூலமாக இயங்கி வரும் 48 சூப்பர் மார்க்கெட்டுகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படலாம் என தெரிகிறது.
தமிழகத்தில் சுமார் 35000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்த ரேஷன் கடைகளுக்கு 900 கடைகள் பகுதி நேரமாகவும் மீதமுள்ள கடைகள் முழு நேர கடைகளாக தற்போது இயங்கி வருகின்றது.
ரேஷன் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே ரேஷன் கடைகளில் அரசு அனுமதித்த பொருட்களை மட்டுமே விற்க வேண்டும் பிற பொருட்களை விற்கக் கூடாது. அதை வாங்குமாறு நுகவோரை கட்டாயப்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ரேஷன் கடைகள் மூலம் வீட்டுக்கே பொருட்களை வழங்குவதில் சிரமம் இருக்கிறது ஏனெனில் 2 கோடிக்கு மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர் .அவர்களது வீடுகளுக்கு சென்று பொருட்களை வழங்குவது தொடர்பாக அரசனது பரிசீலனை செய்து வருகிறது.
ஆனால் அதே நேரத்தில் அரசனது உடல் ரீதியாக சிரமப்படுவதற்கு ரேஷன் பொருட்களை கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்று இந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார்.
அந்த கோரிக்கையில் தமிழக அரசின் மூலம் மக்களை தேடி மருத்துவம் எவ்வாறு மருந்து பொருட்கள் அவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருந்து மாத்திரைகள் வழங்குகிறதோ அதேபோல ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை அவர் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த கோரிக்கை பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது ரேஷன் கடைகளில் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.இதுகுறித்து அமைச்சர் கூறி இருப்பது யாது எனில் மத்திய அரசானது ஜிஎஸ்டி வரி விதிக்காமல் இருந்தால் விரைவில் ரேஷன் பொருட்களை அனைத்தும் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும்.
அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டோர் டெலிவரி செய்யக்கூடிய பொருட்களை பாக்கெட்டுகளாக மாற்ற வேண்டும் என்றும் ,இதனால் பொருட்கள் வீணாகாமல் மக்களுக்கு சரியான அளவில் கிடைக்கும் என்றும் ,இதற்காக 6 மில்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இது போன்ற டோர் டெலிவரி திட்டமானது கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டது கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த நிலையில் தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு தீவிரம் காட்டியது. அதன்படி ரேஷன் பொருட்கள் வீடு வீடாக கொண்டு செல்லும் நடைமுறைக்காக டோக்கன்கள் வழங்கப்பட்டது.
அந்த டோக்கன்களை வைத்து ரேஷன் பொருட்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்து இருந்தது. கொரோனா தொற்றுநோய் என அறிவிக்கப்பட்டதால் நோய் தொற்று ஏற்படாத வண்ணம் ரேஷன் பொருட்கள் பாதுகாப்பாக வழங்கப்பட்டது.
அந்த டோக்கன்களின் பொருட்கள் வழங்கப்படும் நாள் நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது
வீட்டுக்கே சென்ற ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலில் முழங்கியவர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான்.
எனவே ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி செய்யப்பட்டால் அவருடைய கனவு நினைவாகும் என்பதில் ஐயமில்லை. இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வந்தால் தமிழக மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
இந்த திட்டம் விரைவில் வர அரசுக்கு கோரிக்கை வைப்போம்.